திருச்சி: விளையாட்டாக எர்த் கம்பியை பிடித்த 6 வயது சிறுமி - மின்சாரம் தாக்கி பலியான சோகம்

திருச்சி: விளையாட்டாக எர்த் கம்பியை பிடித்த 6 வயது சிறுமி - மின்சாரம் தாக்கி பலியான சோகம்
திருச்சி: விளையாட்டாக எர்த் கம்பியை பிடித்த 6 வயது சிறுமி - மின்சாரம் தாக்கி பலியான சோகம்

திருச்சியில் மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - வனிதா தம்பதியர். இவர்களின இளைய மகள் வேதவர்ஷினி (6). இவர் ஏவூர் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் வேதவர்ஷினி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்சார இணைப்பு வயரின் துணைக் கம்பமாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு குழாயை விளையாட்டு ஆர்வத்தில் வேதவர்ஷினி பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், வேதவர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாத்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com