எடை குறைப்புக்காக சிகிச்சை: ஓமலூர் மாணவி பரிதாப பலி

எடை குறைப்புக்காக சிகிச்சை: ஓமலூர் மாணவி பரிதாப பலி

எடை குறைப்புக்காக சிகிச்சை: ஓமலூர் மாணவி பரிதாப பலி
Published on

உடல் எடை குறைப்புக்காக சிகிச்சை மேற்கொண்ட மாணவி ஒருவர் உயிரிழந்ததால், மருத்துவமனை நிர்வாகத்துடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகள் பாக்யஸ்ரீ. தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார். ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள ஹெர்போ கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், உடல் எடை குறைப்பு சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலைக் குறைவால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காத மருத்துவமனை நிர்வாகத்தினர், யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் உடலை அவரது வீட்டில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பாக்யஸ்ரீயின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற போலீஸார் விசாரணை நடத்தியபின், மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சித்தோடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com