விமான நிலையத்தில் ஈபிஎஸ்ஸை அவதூறாக பேசிய அமமுக பிரமுகர்.. மதுரையில் பரபரப்பு

விமான நிலையத்தில் ஈபிஎஸ்ஸை அவதூறாக பேசிய அமமுக பிரமுகர்.. மதுரையில் பரபரப்பு
விமான நிலையத்தில் ஈபிஎஸ்ஸை அவதூறாக பேசிய அமமுக பிரமுகர்.. மதுரையில் பரபரப்பு

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம் என் திட்டிய நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை - மதுரை விமானத்தில் ஈபிஎஸ்!

மதுரை மற்றும் சிவகங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்தார். அப்போது அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ-க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் ஆகியோர் வரவேற்றனர்.

ஈபிஎஸ்ஸை அவதூறாக பேசிய இளைஞர்

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்த இளைஞர் ஒருவர், எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக அவரை பிடித்து விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரனையில்,

சிங்கபூரிலிருந்து சென்னை வழியாக. மதுரை விமான நிலையத்திற்கு வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஆ.வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரின் மகன் ராஜேஸ்வரன் (42) என்பவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்தபோது செல்போனில் வீடியோ எடுத்த ராஜேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் பயணம் செய்கிறேன். சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் எனக் கூறி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து அவரை விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை!

 எடப்பாடி பழனிச்சாமி குறித்து முகநூலில் அவதூறாக பேசி நேரலை செய்த ராஜேஸ்வரன் போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் மீது தற்போது வரை எந்த ஒரு புகாரும் கொடுக்கப்படாததால் ராஜேஸ்வரனிடம் புகார் கொடுக்கப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் எழுதி வாங்கிக்கொண்டு விமான நிலைய போலீசார் அவரை விடுவித்தனர். அவருக்கு அம முக தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்   ராஜேஸ்வரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளிநாடு வாழ் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com