ஆபத்தான முறையில் பயணம்... ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்
ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
பருத்திபட்டி ஏரியானது நிரம்பியதால் அதன் உபரி நீரானது ஆவடி பூந்தமல்லி சாலையில் வெளியேறி வருவதை அடுத்து, வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி ஆபத்தான வகையில் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.