`ஆட்டோ கட்டண நிர்ணய விவகாரம்... விரைவில் ஆலோசனை!’- போக்குவரத்துத்துறை அறிவிப்பு

`ஆட்டோ கட்டண நிர்ணய விவகாரம்... விரைவில் ஆலோசனை!’- போக்குவரத்துத்துறை அறிவிப்பு
`ஆட்டோ கட்டண நிர்ணய விவகாரம்... விரைவில் ஆலோசனை!’- போக்குவரத்துத்துறை அறிவிப்பு

ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாக வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்யவேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், போக்குவரத்துத்துறை துறை சார்பாக இணை ஆணையர் இன்று அதுதொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், `ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும். போக்குவரத்து ஆணையர் தலைமையில் அந்த ஆலோசனை நடைபெறும். தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆணையம் ஆலோசனை நடத்தவிருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக `பத்து ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தற்போதைய எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவின் அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும்’ என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் என கோரிக்கை விடுத்திருந்தனரும்கூட.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com