காதலனை கரம் பிடிக்க பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண் : பிரம்பால் அடித்து துன்புறுத்திய திருநங்கை

காதலனை கரம் பிடிக்க பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண் : பிரம்பால் அடித்து துன்புறுத்திய திருநங்கை
காதலனை கரம் பிடிக்க பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண் : பிரம்பால் அடித்து துன்புறுத்திய திருநங்கை

காதலனை கரம் பிடிக்க பேய் பிடித்தது போல் நாட‌கமாடிய இளம்பெண்ணை, அருள்வாக்கு கூறுவதாகக் கூறி திருநங்கை ஒருவர் பிரம்பால் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு வலுத்ததாக தெரிகிறது. இதனால் தனது காதலனை கரம் பிடிப்பதற்காக தனக்கு பேய் பிடித்தது போல் நாடகமாடியுள்ளார் அந்தப் பெண். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை கன்னங்குறிச்சியில் உள்ள மதுர காளியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அந்த கோவிலில் அருள் வாக்கு கூறி வரும் திருநங்கை ஒருவர், பேயை விரட்டுவதாகக் கூறி பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்தார். சிறிது நேரத்தில் அந்த பெண் நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். அதோடு நிறுத்தாத திருநங்கை, கதறி அழுது கொண்டிருந்த அவரிடம் காதலனை மறந்து ஆக வேண்டும் என தந்தை, தாய் மீது சத்தியம் வாங்கியுள்ளார். நடிப்பை விரட்டிய திருநங்கை, காதலையும் சேர்த்து விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com