பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்
Published on

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை மூர்மார்க்கெட்- ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்றும் நாளையும் இயக்கப்பட இருந்த சில மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக சிறப்பு மின்சார ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மேம்பால பணி நடைபெற இருப்பதால் இன்றும், நாளையும் சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கமாக இரவு நேரங்களில் இயக்கப்பட இருந்த சில மின்சார ரயில் சேவை பகுதி தூரமாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சில சிறப்பு மின்சார ரெயில்கள் இன்று மற்றும் நாளை இயக்கப்படவுள்ளன.

தாம்பரம்-செங்கோட்டை இடையே வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் காலை 7 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, தாம்பரத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும். செங்கோட்டை-தாம்பரம் இடையே காலை 6 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக காலை 8 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com