பயிற்சி மருத்துவர் கடலில் விழுந்து தற்கொலை - குடும்ப பிரச்னை காரணமா?

பயிற்சி மருத்துவர் கடலில் விழுந்து தற்கொலை - குடும்ப பிரச்னை காரணமா?
பயிற்சி மருத்துவர் கடலில் விழுந்து தற்கொலை - குடும்ப பிரச்னை காரணமா?

மெரினா கடலில் விழுந்து பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே நேற்றிரவு அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கடலில் கரை ஒதுங்கியது. தகவலறிந்து வந்த மெரினா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் இறந்தவர் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த அர்ஜூன் (35) என்பது தெரியவந்தது. அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இவர் கடந்த சில தினங்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று தனது காரில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து கலங்கரை விளக்கம் அருகே காரை நிறுத்திவிட்டு இவர் கடலுக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இறப்பதற்கு முன் தனது சகோதரருக்கு வாட்ஸ்அப்பில் கார் லொகேஷனை அனுப்பிவிட்டு, தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல. அப்பா- அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் என மெசேஜ் செய்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com