போராட்டத்தால் ரயில் சேவை ரத்து

போராட்டத்தால் ரயில் சேவை ரத்து

போராட்டத்தால் ரயில் சேவை ரத்து
Published on

ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சில இடங்களில் நடைபெற்ற ரயில் மறியல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் சேவை பாதிப்படைந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் பாசஞ்ஜர் ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோவை, ஈரோடு, திருப்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சில ரயில்கள் ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டன. மேலும், திருச்சி- திருநெல்வேலி விரைவு ரயில், காரைக்கால்- பெங்களூரு, திருச்சி- ராமேஸ்வரம், தூத்துக்குடி- மைசூர், ராமேஸ்வரம்- திருப்பதி, சென்னை எழும்பூர்- ஈரோடு சிறப்பு ரயில், ஈரோடு- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், புனலூர்- மதுரை, ஈரோடு - திருநெல்வேலி, சென்னை- மதுரை இடையிலான விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com