கோயம்புத்தூர்: ரயில் மோதி 2 குட்டிகள் உட்பட 3 யானைகள் உயிரிழப்பு

கோயம்புத்தூர்: ரயில் மோதி 2 குட்டிகள் உட்பட 3 யானைகள் உயிரிழப்பு
கோயம்புத்தூர்: ரயில் மோதி 2 குட்டிகள் உட்பட 3 யானைகள் உயிரிழப்பு

கோவை மதுக்கரை அருகே கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர்.

கோவை மதுக்கரை அருகே ரயில் மோதியதில் 2 குட்டி யானைகள் உட்பட 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்ற நிலையில், கேரளாவில் இருந்து வந்த ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com