விழுப்புரம்: மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்த மின்ஊழியருக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம்: மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்த மின்ஊழியருக்கு நேர்ந்த சோகம்

விழுப்புரம்: மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்த மின்ஊழியருக்கு நேர்ந்த சோகம்

மரக்காணம் அருகே மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்த மின்ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள கோணவாயன் குப்பத்தில் மின்மாற்றியை பழுது பார்க்கச் சென்ற கரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவர் மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com