இந்தோனேஷியாவிற்கு இன்பச் சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்

இந்தோனேசிய தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண காதல் தம்பதியர் படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வம் - மல்லிகா தம்பதியரின் மகள் விபூஷ்னியா பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் - குணசுந்தரி ஆகியோரின் மகன் மருத்துவரான லோகேஷ்வரனுக்கும் கடந்த 1ஆம் தேதி பூவிருந்தவல்லியில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணம் முடிந்த ஒரிரு நாளில் இருவரும் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மோட்டர் படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது படகு விபத்து ஏற்பட்டு இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து லோகேஷ்வரனின் உடலை சடலமாக மீட்ட காவல் துறையினர், விபூஷ்னியா உடலை அடுத்த நாள் மீட்டனர்.

இன்பச் சுற்றுலா சென்ற காதல் தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதையடுத்து இருவரின் உடலையும் அங்கிருந்து சென்னை கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com