\
ஒகேனக்கல்லில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதி

ஒகேனக்கல்லில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதி

ஒகேனக்கல்லில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதி
Published on
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
உலக சுற்றுலாத் தினத்தையொட்டி இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் களைக்கட்ட ஆரம்பித்துள்ளது. அதேநேரம், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், ஆயில் மசாஜ் செய்வதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
தொடர்ந்து பரிசலில் சென்று பொம்மச்சிக்கல், ஐந்தருவி, மணல்திட்டு, கர்நாடக எல்லை போன்ற பகுதிகளை பார்க்கவும் அனுமதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com