முதுமலை: கனமழையால் யானை சவாரி ரத்து; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

முதுமலை: கனமழையால் யானை சவாரி ரத்து; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
முதுமலை: கனமழையால் யானை சவாரி ரத்து; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
கனமழை காரணமாக முதுமலையில் யானை சவாரி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
முதுமலையில் யானை சவாரி ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இதையறிந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி சுற்று வட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. மழை நேரத்தில் யானைகள் வனப்பகுதிக்குள் நடந்து செல்ல சிரமப்படுவதால் சவாரி ரத்து செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com