\
கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 89 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 89 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 89 பேர் உயிரிழப்பு
Published on

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 7,758 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,51,055 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 66 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 23 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மொத்தம் 3,409 பேர் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com