டாப் 10 தேர்தல் களம்: ராகுல்காந்தி பரப்புரை முதல்வரிடம் ஆ.ராசா மன்னிப்பு வரை!

டாப் 10 தேர்தல் களம்: ராகுல்காந்தி பரப்புரை முதல்வரிடம் ஆ.ராசா மன்னிப்பு வரை!
டாப் 10 தேர்தல் களம்: ராகுல்காந்தி பரப்புரை முதல்வரிடம் ஆ.ராசா மன்னிப்பு வரை!

* முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மனம் திறந்து மன்னிப்பு கோருவதாக திமுக எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.  > “முதல்வரிடம் நான் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன்” - ஆ.ராசா பேட்டி

* “பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிரான போர்தான் இத்தேர்தல்!” என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > “பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிரான போர்தான் இத்தேர்தல்!” - மு.க.ஸ்டாலின் ட்வீட்

* சோழிங்கநல்லூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கோவிலம்பாக்கம், கண்ணகி நகர், சிறுசேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். விரிவாக வாசிக்க > சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

இந்த தேர்தலோடு தீய சக்திக்கும், துரோக சக்திக்கும் முடிவுகட்ட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். விரிவாக வாசிக்க > "திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்" - டிடிவி தினகரன்

* பெண்களை தொடர்ந்து இழிவாக பேசினால் திமுகவினரின் நாக்கு அவர்களுக்கு சொந்தமாக இருக்காது என அமைச்சரும், திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். விரிவாக வாசிக்க > "இல்லாததை சொன்னால் நாக்கு உங்களுக்கு சொந்தமாக இருக்காது" - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

* அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தால் அவர்கள் சட்டமன்றத்திற்கு செல்ல மாட்டார்கள், நேராக கூவத்தூர் சென்றுவிடுவார்கள் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். விரிவாக வாசிக்க > “அதிமுகவினரை வெற்றி பெறச் செய்தால், நேராக கூவத்தூர் சென்றுவிடுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்

* காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் செய்யவுள்ள வாக்குறுதிகளை உறுதிமொழி பத்திரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டு வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர். விரிவாக வாசிக்க > வாக்குறுதிகளை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

* சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான சுகந்தன் என்பவர் சாலையில் உருண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விரிவாக வாசிக்க > உருண்டு புரண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் - வாக்கு சேகரிப்பில் இது புதுரகம்!

* மணப்பாறை அருகே அதிமுக வேட்பாளரின் ஊழியர் வீட்டில் 1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > அதிமுக வேட்பாளரின் ஊழியர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல் - வருமான வரித்துறையினர் அதிரடி

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செய்த தவறுகளால் பாஜகவிடம் அதிமுக தலைகுனிந்து நிற்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > "இது பழைய அதிமுக அல்ல; பாஜகவிடம் தலைகுனிந்து நிற்கிறது" - சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com