6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், சில இடங்களில் வெள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே கடந்த மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com