வெறும் கண்களால் நாளை சந்திர கிரகணத்தைக் காணலாம்

வெறும் கண்களால் நாளை சந்திர கிரகணத்தைக் காணலாம்

வெறும் கண்களால் நாளை சந்திர கிரகணத்தைக் காணலாம்
Published on

இந்தியாவில் நாளைக்கு பகுதியளவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.

நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கும் கிரகண நிகழ்வு நாளை அதிகாலை 1.31 மணிக்கு முழுமையடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணி 29 நிமிடத்திற்கு கிரகணம் முற்றிலும் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வை இந்தியாவில் எல்லா பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களால் கண்டுகளிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அடுத்த முழுமையான கிரகணம் 2021-ம் ஆண்டுதான் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com