நாளை பிளஸ் டூ ரிசல்ட்: எஸ்.எம்.எஸ்சில் மார்க்!

நாளை பிளஸ் டூ ரிசல்ட்: எஸ்.எம்.எஸ்சில் மார்க்!

நாளை பிளஸ் டூ ரிசல்ட்: எஸ்.எம்.எஸ்சில் மார்க்!
Published on

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. முடிவு வெளியான 10 நிமிடங்களில் மதிப்பெண்களை குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களையும் சேர்த்து 9 லட்சத்துக்கு 30 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்படுகிறது. இதை முடிவை WWW.TN RESULTS.NIC.IN, WWW.DGE 1.TN.NIC.IN மற்றும் WWW.DGE 2.TN.NIC.IN ஆகிய இணையதளங்கள் மூலம் பார்க்கலாம்.

15ம் தேதி அன்று WWW.DGE.TN.NIC.IN என்ற இணையதளத்திலும், 17ம் தேதி அன்று பள்ளியிலும் மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை மறுகூட்டலுக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதில் மொழி பாடங்களுக்கு 305 ரூபாயும், ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் எஸ்.எம்.எஸ் மூலமாக மதிப்பெண்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com