சென்னை: தொடர் கனமழையால் காய்கறி வரத்து குறைந்தது; ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை

சென்னை: தொடர் கனமழையால் காய்கறி வரத்து குறைந்தது; ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை

சென்னை: தொடர் கனமழையால் காய்கறி வரத்து குறைந்தது; ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை
Published on
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மொத்த விற்பனையில் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை வணிக கடைகளில் கிலோவுக்கு 90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதி கனமழை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே போல், வெங்காயம், கேரட், அவரைக்காய், முருங்கைக்காய், முருங்கை விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 60 ரூபாய் என விலை அதிகரித்துள்ளது. கேரட் நிலை விலையும் கிலோ 120 என விற்கப்படுகிறது. அதீத கனமழையால் வீட்டில் பொதுமக்கள் முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய காய்கறிகளின் விலை ஏற்றம் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது அதே நேரத்தில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com