இன்றைய காலை தலைப்பு செய்திகள்
இன்றைய காலை தலைப்பு செய்திகள்காலை தலைப்புச் செய்திகள்

HEADLINES|பள்ளிகளுக்கு விடுமுறை - மண் சரிவில் சிக்கிய குழந்தைகள் உட்பட 7 பேர்!

இன்றைய காலை தலைப்பு செய்தியானது, பள்ளிகளுக்கு விடுமுறை முதல் மண் சரிவில் சிக்கிய குழந்தைகள் உட்பட 7 பேரை மீட்கும் மீட்புப்படையினர் வரை உள்ளிட்ட செய்திகளை விவரிக்கிறது.
Published on
  • விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.

  • சென்னை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணாமலை, திருவள்ளுவர், சேலம் பெரியார் பல்கலை. தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.

  • ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மையம் கொண்ட ஃபெஞ்சல் புயல் மேலும் வலுவிழந்தது. மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக் கூடும் என வானிலை மையம் கணிப்பு.

  • திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் சிக்கினர். மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரம்.

  • மண் சரிவில் சிக்கிய வீடுகளில் இருந்த 7 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல்.

  • திருவண்ணாமலை அருகே கொண்டம் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி.

  • விழுப்புரத்தில் இரு குழந்தைகளை பக்கெட்டில் வைத்து பத்திரமாக மீட்ட புதிய தலைமுறை செய்தியாளர் காமராஜ். செய்தியாளர்கள் என்பவர்கள் சமூகத்தின் அங்கம் என்பதை நிரூபித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் பாராட்டு.

  • தியாகதுருகம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம். புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தடுப்புகள் அமைத்த காவல் துறை.

  • சேலம் மாவட்டத்தில் பொழிந்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் பாதிப்பு..

  • தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஏற்காடு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்.

  • தஞ்சை அருகே வீட்டின் பழைமையான வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

  • தஞ்சாவூர் அருகே சூறைக்காற்றில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம். அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்.

  • ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 3 நாள்களாக பொழியும் கனமழையால், ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுப்பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.

  • எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டை மதிப்பதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி. இதற்கு, மக்கள் பிரச்னைகளை எழுப்பினால் முதலமைச்சர் பதில் சொல்வது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பதிலடி.

  • ஒரு வெற்றிகரமான நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்.. தோல்வியடைந்த நடிகர் துணை முதல்வராகிவிட்டார். என கோவை நிகழ்ச்சியில் விஜயையும், உதயநிதியையும் விமர்சித்த அண்ணாமலை.

  • புதுச்சேரி உள்துறை அமைச்சரை முற்றுகையிட்ட சொந்த தொகுதி மக்கள். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வலியுறுத்தல்.

  • திருச்செந்தூர் கடல் பகுதியில் இரண்டு கல்வெட்டுக்கள் கண்டெடுப்பு. 100 ஆண்டுகளுக்கு உட்பட்டது எனத் தகவல்.

  • உளுந்தூர்பேட்டை அருகே தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் போக்குவரத்து துண்டிப்பு.

  • சென்னை மதுரவாயலில் சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம், 15 அடி அகலம், 10 அடி ஆழத்தில் இருப்பதால், போக்குவரத்து பாதிப்பு.

  • சத்தியமங்கலம் அருகே மலைகிராமத்தில் சுற்றித்திரியும் 30க்கும் அதிகமான காட்டு யானைகள்.

  • கர்நாடகாவில் இருந்து விரட்டப்பட்ட யானைகளால் கிராம மக்கள் அச்சம்.

  • டிஜிட்டல் மோசடிகளை தடுத்தல் மற்றும் துறைமுக பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என வருடாந்திர போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

  • மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு வரும் 5 ஆம் தேதி பதவியேற்பு. புதிய முதல்வர் யார் என்பது இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு.

  • இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கவலையளிக்கிறது என்று, சுயசரிதை நூலில் ஜெர்மனி முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் குற்றச்சாட்டு.

  • ஜார்ஜியா அரசின் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக்கு எதிர்ப்பு. நான்காவது நாளாக இரவு நேரத்தில் நடைபெற்ற பிரமாண்ட போராட்டம்.

  • காஸாவில் இஸ்ரேல் தாக்குதல். கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழப்பு.

  • இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு துறவிகள் வங்கதேசத்தில் கைது. துறவிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு.

  • ஆஸ்திரேலியா ப்ரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம். இந்திய அணி வெற்றி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com