புரட்டாசி மாதம் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி, கறிக்கோழி மற்றும் மீன் உள்ளிட்டவற்றின் விற்பனை பெரிதும் சரிந்தது. தற்போது புரட்டாசி மாதம் முடிந்துவிட்டதால் அவற்றின் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இன்று விடுமுறை நாள் என்பதால் சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். வஞ்சிரம் கிலோ 500 ரூபாய்க்கும், வவ்வால் 550 ரூபாய்க்கும், நெத்திலி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆட்டிறைச்சி கிலோ 800 ரூபாய்க்கும், கோழிக்கறி 240 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.