சிஏஏ மனுக்கள் மீது விசாரணை; ஆகம விதிப்படி குடமுழுக்கு; இன்னும் முக்கியச் செய்திகள் #TopNews

சிஏஏ மனுக்கள் மீது விசாரணை; ஆகம விதிப்படி குடமுழுக்கு; இன்னும் முக்கியச் செய்திகள் #TopNews

சிஏஏ மனுக்கள் மீது விசாரணை; ஆகம விதிப்படி குடமுழுக்கு; இன்னும் முக்கியச் செய்திகள் #TopNews
Published on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 143 மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். அரசு கொண்டு வந்த திருத்தம் அரசமைப்பு சாசனத்திற்கு உட்பட்டதா என ஆய்வு.

சேலம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் கால்நடை பூங்காவுக்கு பிப்ரவரி 7-ல் அடிக்கல். ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

பெரியார் குறித்து பேசிய கருத்திற்காக மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்.

பயிலும் பள்ளியிலேயே 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: உரிய ஆணை பிறப்பிக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.

சென்னையில் 13 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிறைவு. கடந்தாண்டை விட இந்தாண்டு வாசகர்கள் வருகை 20% அதிகம்.

தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல். விழாவை கண்காணிக்க குழு அமைத்தும் தமிழக அரசு உத்தரவு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com