பேச்சுவார்த்தையில் இழுபறி: போராட்டம் தொடர்கிறது

பேச்சுவார்த்தையில் இழுபறி: போராட்டம் தொடர்கிறது

பேச்சுவார்த்தையில் இழுபறி: போராட்டம் தொடர்கிறது
Published on

போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்புப் பேச்சு வார்த்தை ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் நலத்துறையின் அழைப்பை ஏற்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மீண்டும் பேச்சுவாரத்தையில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்தன.

தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் இ‌யக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூர் பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை மீண்டும் அழைப்பு விடுத்திருந்தது. இப்பேச்சுவார்த்தையில் 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஐடியு, தொமுச சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை என்று தொழிலாளர் நலத்துறை சார்பாக கூறப்படுகிறது.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வராததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று தொழிற்ச்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com