மின் ஊழியர்களின் அஜாக்கிரதையால் மின்கம்பம் விளையாட்டு வீரரின் காலில் விழுந்து விபத்து

மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிக்காக தயாராகி வந்த பரிதி விக்னேஸ்வரன், மின் ஊழியர்களின் அலட்சியத்தால், காலை இழந்தது அவரின் குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையில் மின் கம்பம் விழுந்ததில் கல்லூரி மாணவரின் கால் துண்டான வழக்கில் 3 பேர் மீது வழக்கு பதிவு.

மதுரை கோச்சடைப் பகுதியில் சாலையோரத்தில் இருந்த பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றும் பொழுது அதன் வழியாக சென்ற பரிதி விக்னேஸ்வரன் என்ற விளையாட்டு வீரரின் கால் மேல் 3 டன் எடைக்கொண்ட மின் கம்பம் விழுந்ததில் அவரின் கால் நசுங்கி துண்டாகி உள்ளது.

மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிக்காக தயாராகி வந்த பரிதி விக்னேஸ்வரன், மின் ஊழியர்களின் அலட்சியத்தால், காலை இழந்தது அவரின் குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com