தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலர் கருப்பு கருணா மறைவு: தலைவர்கள் இரங்கல்

தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலர் கருப்பு கருணா மறைவு: தலைவர்கள் இரங்கல்
தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலர் கருப்பு கருணா மறைவு: தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தோழர் கருப்பு கருணா இறந்துவிட்டார் என்ற நெஞ்சை உலுக்குகிறது. அவர் தமுஎகச மாநில தலைவர்களில் ஒருவர். துடிப்புமிக்க செயல்பாட்டாளர். புத்தாக்க சிந்தனையாளர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். 

செவ்வஞ்சலி” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். 

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் கருப்பு கருணா மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவருக்கு என் அஞ்சலி <a href="https://t.co/ACMGLFMLtQ">pic.twitter.com/ACMGLFMLtQ</a></p>&mdash; Dr Ravikumar M P (@WriterRavikumar) <a href="https://twitter.com/WriterRavikumar/status/1340923337904558081?ref_src=twsrc%5Etfw">December 21, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

“தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் கருப்பு கருணா மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவருக்கு என் அஞ்சலி” என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">த.மு.எ.க.ச மாநில துணைப் பொது செயலாளர் அண்ணன் கருப்பு கருணாவின் மறைவு செய்திக்கேட்டு அதிர்ச்சியுற்றேன். எழுத்தாலும் - செயலாலும் அன்றாடம் சமூக மாற்றத்துக்காகவே உழைத்த அண்ணனின் குடும்பத்தார், த.மு.எ.க.ச - இடதுசாரி தோழர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். <a href="https://t.co/wn6o9HB6Ns">pic.twitter.com/wn6o9HB6Ns</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://twitter.com/Udhaystalin/status/1340930528929726465?ref_src=twsrc%5Etfw">December 21, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

“த.மு.எ.க.ச மாநில துணைப் பொது செயலாளர் அண்ணன் கருப்பு கருணாவின் மறைவு செய்திக்கேட்டு அதிர்ச்சியுற்றேன். எழுத்தாலும் - செயலாலும் அன்றாடம் சமூக மாற்றத்துக்காகவே உழைத்த அண்ணனின் குடும்பத்தார், த.மு.எ.க.ச - இடதுசாரி தோழர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com