வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
Published on

சென்னையில் வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பல்லவன் இல்ல பகுதியில் வெள்ள சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது ஏழைகளுக்கு உணவு வழங்கிய அவர், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டதால்தான் வெள்ளம் விரைவாக வடிந்திருப்பதாக தெரிவித்தார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு கட்டுப்பாட்டு அறையின் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பார்வை‌யிட்டார். அப்போது மக்களின் வெள்ள பாதிப்புகளை அறிந்து அதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் புதிய தலைமுறையின் இத்தைய செயலால், மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காண முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். சென்னை கொரட்டூர் ஏரியில் கழிவு நீர் கலப்பது குறித்து அமைச்சர் பாண்டியராஜனும் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டரும் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஏரியில் கழிவு நீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com