“ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமா?” - தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதிPT Tesk

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை நேற்று நள்ளிரவில் கைது செய்தது. நள்ளிரவு 2 - 3 மணியளைவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் ஜனநாயக நாட்டில்தான் நாம் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். அமைச்சரின் பேட்டியை, இங்கே காண்க...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com