தமிழகத்தில் டெங்கு பரவல்... பொது சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும், டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
டெங்கு
டெங்குபுதிய தலைமுறை

செய்தியாளர்: பால வெற்றிவேல்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும், டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பருவமழை தொடங்க உள்ளதால் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நோய் தடுப்பு மையங்களை அமைத்து டெங்கு பரவலை தடுக்க வேண்டும் என மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த அறிவிப்பில், ”பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலத்தில், நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும்.

டெங்கு
சுட்டெரிக்கும் வெயிலில் சுடசுட டீ குடிக்கப்போறீங்களா? அய்யயோ... இதை மட்டும் பண்ணிடாதீங்க!

அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ கருவிகள் படுக்கைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு கொசு உற்பத்தி நடைபெறும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, தேவையான ரத்தத் தட்டணுக்கள், நோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள் போன்றவை போதுமான அளவில் இருப்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com