''ஆவணங்களை ஒப்படைக்க முடியாது'' - தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய பொன்.மாணிக்கவேல் 

''ஆவணங்களை ஒப்படைக்க முடியாது'' - தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய பொன்.மாணிக்கவேல் 
''ஆவணங்களை ஒப்படைக்க முடியாது'' - தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய பொன்.மாணிக்கவேல் 

சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடியாது என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் முடிந்த நிலையில், சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை அவர் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில் ஆவணங்களை தருவதற்கு மறுப்பு தெரிவித்து பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஆவணங்களை தருவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க தன்னை உயர்நீதிமன்றம் நியமித்து, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது என்பதால், தமிழக அரசின் உத்தரவு தனக்கு பொருந்தாது என்றும், நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

ஆவணங்களை ஒப்படைக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு டிசம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அதுவரை அரசு காத்திருக்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com