மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
Published on

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மதுரையில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுமென அறிவித்திருந்தார். இதுதொடர்பாக, மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com