மீன்கள் விலை உயர வாய்ப்பு?

மீன்கள் விலை உயர வாய்ப்பு?
மீன்கள் விலை உயர வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த நிலையில் தமிழக விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதனிடையே மீன்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட மீன்பிடித் தடைக்காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை காசிமேடு , தூத்துக்குடி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தூத்துக்குடியில் 240 விசைப்படகுகள் பதிவு செய்திருந்த நிலையில் அதில் 120 படகுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. படகுகளில் மீனவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே டீசல் விலை அதிகரித்ததன் காரணமாக மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்துவரும் டீசல் விலை பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் கூறிய அவர்கள், அதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என்றால் மீன்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com