நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு - தமிழக மீனவர்களை பிடித்துச்சென்ற இலங்கை கடற்படை

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு - தமிழக மீனவர்களை பிடித்துச்சென்ற இலங்கை கடற்படை

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு - தமிழக மீனவர்களை பிடித்துச்சென்ற இலங்கை கடற்படை
Published on

புதுக்கோட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து சுமார் 96 விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களில் பாரதி, அசோக், சக்திகுமார், மணி ஆகிய நான்கு பேரும் நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களது விசைப்படகு தண்ணீரில் மூழ்கியது.

சம்பவ இடத்தில் இருந்த இலங்கை கடற்படையினர் 4 தமிழக மீனவர்களையும் பிடித்து, காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். மீனவர்களுடைய விசைப்படகு பழுது காரணமாக மூழ்கியதா அல்லது இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டதா என்பது குறித்து, மீனவர்கள் திரும்பி வந்த பின்னரே தெரியும் என சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com