நிறைவடைந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

நிறைவடைந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

நிறைவடைந்தது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு!
Published on

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.

காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவரவர் தொகுதிகளில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். மாலை 6 மணியிலிருந்து 7 மணிவரை கொரோனா நோயாளிகளும் பிபிஇ கிட் அணிந்துவந்து வாக்களித்தனர்.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும், அதேபோல் கேரளாவில் 140 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தற்போது வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com