தமிழ்நாடு
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு
இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்சோ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் பிரிட்சோ என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொரு மீனவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்சோ குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மீனவர் சரோனுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.