3 அணைகளிலிருந்து நீர்திறக்க முதல்வர் உத்தரவு

3 அணைகளிலிருந்து நீர்திறக்க முதல்வர் உத்தரவு
3 அணைகளிலிருந்து நீர்திறக்க முதல்வர் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சாஸ்தாகோவில் நீர்த்தேக்கம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து கார் சாகுபடி பாசனத்திற்காக வரும் 27ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை, 48 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் 3ஆயிரத்து 130 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதேபோல், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து வரும் 27ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாகவும், இதன் மூலம் 959 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com