தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு - பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி

தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு - பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி
தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு - பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி

தேர்தலுக்குப் பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக பல கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

''தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுதான் கூடி முடிவெடுக்கும்.'' எனத் தெரிவித்தார்.

முன்னதாக, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அதிமுக பாஜகவுடனான கூட்டணி தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியபோது, தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினர்.

இதனையடுத்து பாஜக - அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கருதப்பட்ட நிலையில், அரியலூரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனத் தெரிவித்தார். அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவினர் பலர் முருகனுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உறுதியாக கூறினர். சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்திலும் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக, தன்னுடைய உறுதியை பதிவு செய்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com