திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் - திமுக அறிவிப்பு

திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் - திமுக அறிவிப்பு
திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் - திமுக அறிவிப்பு

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரை, கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில், அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி. சங்கர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் சாலை போடும் பணியின்போது மாநகராட்சி உதவி பொறியாளரை கே.பி.சங்கர் கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த கே.பி.சங்கர், சாலை போடும் பகுதிக்கே தான் செல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார். பழைய சாலையை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலை போட்ட ஒப்பந்ததாரருடன் தமது உதவியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது உதவி பொறியாளரை தமது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் கே.பி.சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com