கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்
கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வை காண லட்சோப லட்ச பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். இந்த முறை கொரோனா தொற்றினால் பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுத்ததோடு எல்லைக்கு சீல் வைத்தது மாவட்ட நிர்வாகம். கோயிலுக்குள் பக்தர்கள் வரவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 

அதனால் பெருவாரியான பக்தர்கள் நேரலையில் தொலைக்காட்சி மூலமாக திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதை கண்டனர். கோயிலின் 2668 அடி உயர மலை உச்சியில் 3500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கிரிவல சாலையில் இருக்கும் ரமண ஆஷ்ரமத்திற்கு சென்ற அவர் அங்கும் வழிபாடு செய்தார். அவரைப் பார்த்த காவலர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com