திருவள்ளூர்: கணவரின் இறப்பை மறைத்து ஆணவக் கொலை செய்துள்ளதாக மனைவி புகார்

திருவள்ளூர்: கணவரின் இறப்பை மறைத்து ஆணவக் கொலை செய்துள்ளதாக மனைவி புகார்
திருவள்ளூர்: கணவரின் இறப்பை மறைத்து ஆணவக் கொலை செய்துள்ளதாக மனைவி புகார்

திருவள்ளூரில் கணவரின் இறப்பை மறைத்து சடலத்தை எரித்து ஆணவக் கொலை செய்துள்ளதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அயநல்லூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அமுல் (25). இவர், கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது ரயில் மூலம் சென்னைக்கு செல்லும் போது இவரும், ஆரணியை அடுத்துள்ள காரணி கிராமத்தைச் சேர்ந்த (வேறு சமூகத்தை) கௌதம் என்பவரும் காதலித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு கௌதம் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அமுலை திருமணம் செய்து கொண்டு இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் வசித்து வந்தனர். இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி கௌதமின் உறவினர் இறந்து விட்டதாக வந்த தகவலின் பேரில் காரணி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்ற கௌதம், வீடு திரும்பவில்லை. அமுல் தனது கணவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போதும் பேச முடியாமல் போனது.

இதனால் சந்தேகமடைந்த அமுலின் உறவினர்கள், கௌதமின் ஊருக்கு சென்றபோது அங்கு கௌதம் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமுல் ஒரு மாதமே நிரம்பிய தனது கைக்குழந்தையுடன் கணவரின் மரணத்தை தன்னிடம் மறைத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது கணவரை ஆணவக் கொலை செய்து தடயங்களை மறைப்பதற்காக தனக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாக கௌதமின் சடலத்தை அவருடைய உறவினர்கள் எரித்து விட்டதாக அமுல் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளதால் கௌதமின் இறப்பு குறித்து ஆரணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com