தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் - திருவள்ளூர் அருகே பரபரப்பு!

தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் - திருவள்ளூர் அருகே பரபரப்பு!
தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் - திருவள்ளூர் அருகே பரபரப்பு!

பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் நள்ளிரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகம் உள்ளது. இதில், 4 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில், வேலம்மாள் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் ஒன்று வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்து சோதனை நடத்தியதில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் 2-வது முறையாக பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு உள்ளதா என நள்ளிரவு முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து 2-வது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்த வாட்ஸ்-அப் எண் வெளிநாட்டில் இருந்து வந்தது போல் இருப்பதால் மிரட்டல் விடுத்தது யார் என கண்டறிய முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com