திருப்பூர்: சாலை விபத்தில் இருவர் பலி - போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர்: சாலை விபத்தில் இருவர் பலி - போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர்: சாலை விபத்தில் இருவர் பலி - போலீசார் தீவிர விசாரணை

தாராபுரம் புதிய புறவழிச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம்: தாராபுரம்: அலங்கியம் பகுதியில் உள்ள தனியார் நுட்பாலையில் வேலை பார்த்து வந்த கொட்டமுத்தம்பாளையம், சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (22) மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விஷ்வா (30) ஆகிய இருவரும் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் புறவழிச் சாலை நஞ்சியம்பாளையம் ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது டிவைடரில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் காவல்துறை ஆய்வாளர் மணிகண்டன் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com