‘நைட்டி , சார்ட்ஸ் உடைகளுக்கு தடை’ - திருப்பூர் காவல்துறை அறிவிப்பு

‘நைட்டி , சார்ட்ஸ் உடைகளுக்கு தடை’ - திருப்பூர் காவல்துறை அறிவிப்பு

‘நைட்டி , சார்ட்ஸ் உடைகளுக்கு தடை’ - திருப்பூர் காவல்துறை அறிவிப்பு
Published on

திருப்பூர் காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்கள் நைட்டி , சார்ட்ஸ் போன்றவைகளை அணிந்து வரக் கூடாது எனக் காவல் நிலையத்தின் முகப்பு பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்நிலையம் திருமுருகன்பூண்டி காவல்நிலையம். இந்தக் காவல் நிலையத்தில், புகார் அளிக்க வருபவர்கள் நைட்டி மற்றும் சார்ட்ஸ் அணிந்து வரக் கூடாது எனக் காவல்நிலையத்தின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நோட்டீஸில் இல்லாவிட்டாலும் , லுங்கி அணிவதையும் தவிர்க்குமாறு காவல்துறையினர் கூறி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் உமா, அந்த அறிவிப்பில் இருக்கும் உடைக்கட்டுப்பாடு என்பது கட்டாயம் அல்ல. பெரும்பாலான இளைஞர்கள் சார்ட்ஸ் அணிந்து வருவதால் அரசு அலுவலகத்தின் சூழல் கெடுகிறது. அதனை தவிர்க்கவே இதை சோதனை முறையில் திருமுருகன் பூண்டி காவல்நிலையத்தில் அமல்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார். 

மேலும், இந்த விதி பொதுமக்களிடையே வரவேற்பை பெறாவிட்டால் உடனடியாக நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com