திருப்பூர்: ஒரே வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 2 குழந்தைகள்; போலீஸ் விசாரணை

திருப்பூர்: ஒரே வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 2 குழந்தைகள்; போலீஸ் விசாரணை
திருப்பூர்: ஒரே வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த 2 குழந்தைகள்; போலீஸ் விசாரணை

திருப்பூரில் ஒரே வீட்டில் மர்மான முறையில் இரண்டு குழந்தைகள் இறந்த காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாளத்தை சேர்ந்த சந்தோஷ் (32) ஆர்த்தி (25) தம்பதி, பிரையன் (7), பிரியங்கா (4) மற்றும் அனில்(3) ஆகிய மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் தண்ணீர் பந்தல் பகுதியில் வசித்து வருகின்றனர். சந்தோஷ் அதே பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் நேற்று, மூத்த மகனான பிரையன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் பரிசோதித்தபோது, பிரையன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு மற்றொரு குழந்தையான பிரியங்காவும் எந்த அசைவும் இல்லாமல் படுத்த படுக்கையாக இருந்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த பெற்றோர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்ததில் பிரியங்காவும் உயிரிழந்ததை மருத்துவர் உறுதி செய்தார்.


ஒரே வீட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com