திருப்பூரில் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பரந்தாமன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக பரந்தாமனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தன்னிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்துவதாகவும், பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் பத்மாவதி.
தற்போது இரண்டு மகள்களுடன் வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கின்ற சூழ்நிலையில் தன்னுடன் வாழ மறுத்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் கணவனிடமிருந்து மகள்களுக்கான ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பத்மாவதி இன்று தனது இரண்டு மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது