திருப்பூர்: பனியன் நிறுவன உரிமையாளர் பெண் ஊழியருடன் தற்கொலை

திருப்பூர்: பனியன் நிறுவன உரிமையாளர் பெண் ஊழியருடன் தற்கொலை
திருப்பூர்: பனியன் நிறுவன உரிமையாளர் பெண் ஊழியருடன்  தற்கொலை

திருப்பூரில் பெண் தொழிலாளியுடன், பனியன் நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் - நெருப்பெரிச்சல், ஜி.என்.பாலன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். திருமணமாகாத இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய பனியன் நிறுவனத்தில், தேனி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகை செல்வன் என்பவரின் மனைவி நிரோஷா தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பிரேம்குமாரின் தாயார் வெளியே சென்றுள்ளார். அவர், திரும்ப வந்து கதவை தட்டி நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரேம்குமாரும், நிரோஷாவும் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகில் விஷ பாட்டில், செல்போன் ஆகியவை கிடந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார் செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com