திருப்பத்தூர்: தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; 31 பேர் படுகாயம் - என்ன நடந்தது?

திருப்பத்தூரில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து file image

திருப்பத்தூர் நெடுமறம் அருகே தஞ்சாவூரில் இருந்து மானாமதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து திருப்பத்தூர் வழியாக ராமநாதபுரம் சென்ற தனியார் ஆம்னி பேருந்தும், விருதுநகர் மாவட்டத்திலிருந்து மேல்மருவத்தூர் சென்ற சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 31 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். சுற்றுலா பேருந்தில் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு கை துண்டானது.

விபத்துக்குள்ளான பேருந்து
தூத்துக்குடி - அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்... நடுவில் சிக்கிக்கொண்ட ரயில் - பயணிகளின் நிலை என்ன?
காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை
காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com