திருப்பத்தூர்: சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் தூங்கியபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு

திருப்பத்தூர்: சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் தூங்கியபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு

திருப்பத்தூர்: சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் தூங்கியபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மேற்கூரையின் மீது படுத்துத் தூங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரயில் மீது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ரயில் மேற்கூரையில் படுத்துத் தூங்கியபடி வந்துள்ளார். இதையடுத்து ரயில் விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது இதை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்திய காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி மின் இணைப்பை துண்டித்து கீழே இறக்கினர். இதனால் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இவர் எங்கே ரயில் மேற்கூரை மீது ஏறி படுத்துத் தூங்கினார் என்று ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com