நெல்லை: வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிக்காப்டர் மூலம் மீட்பு

நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஏறத்தாழ அனைத்து இடங்களும் நீரால் சூழப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் நெல்லையில் உள்ள அருகன்குளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிக்காப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க கடற்படையை மாவட்ட நிர்வாகம் நாடியது. இதனை அடுத்து கடற்படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com