தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் காலஅவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி விசாரித்துவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் புதிய ஆட்சி பொறுப்பேற்றபோது இடைக்கால அறிக்கையை மே 14-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்திருந்தது. தற்போது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணைக் காலத்தை 2022 பிப்ரவரி 22 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com